மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாபில் பிப். 2-ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

விவசாயிகள் நலன் குறித்து விவாதிப்பதற்காக பஞ்சாபில் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

News image

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் (கோப்புப்படம்)

Updated On :31 ஜனவரி 2021, 11:48 am

DIN

விவசாயிகள் நலன் குறித்து விவாதிப்பதற்காக பஞ்சாபில் பிப்ரவரி 2-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முதல்வர் அமரீந்தர் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 67-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகளில் விவசாயிகளுக்கு அதிக அளவு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விவசாயிகளின் நலன் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பஞ்சாப் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.