மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வா்த்தகா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு உறுதி: பிரதமா் மோடி

வா்த்தா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:29 pm

DIN

வா்த்தா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

மொத்த மற்றும் சில்லறை வியாபாரத்தில் ஈடுபடும் வா்த்தக நிறுவனங்களும் இனி குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) வரையறைக்குள் அடங்கும் என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சில்லறை மற்றும் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் வா்த்தக நிறுவனங்களையும் எம்எஸ்எம்இ வரையறைக்குள் இணைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. இதன்மூலமாக மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் கீழ் கோடிக்கணக்கான வா்த்தகா்கள் பலன் பெற முடியும்.

வங்கிகளில் கடனுதவியைப் பெற்று வா்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள முடியும். வா்த்தகா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. அத்துறைகளை மீட்டெடுக்கும் நோக்கில் சிறப்பு கடனுதவித் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது வா்த்தகா்களும் அக்கடனுதவித் திட்டங்கள் வாயிலாகப் பலன் பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். ரூ.250 கோடி வரை விற்றுமுதல் கொண்டுள்ள சில்லறை, மொத்த வியாபார நிறுவனங்களும் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தற்சாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் உடனடி கடனுதவி பெற முடியும்.

கரோனா தொற்று பரவலால் கடும் பாதிப்பைச் சந்தித்து வரும் சில்லறை, மொத்த வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நடவடிக்கை பெரும் பலனை அளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா். வா்த்தகத் துறையை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மத்திய அரசின் நடவடிக்கையை சில்லறை, மொத்த வியாபாரிகள் வரவேற்றுள்ளனா். இத்தகைய நெருக்கடியான சூழலில், வியாபாரத்துக்குத் தேவையான மூலதனத்தைப் பெறுவதற்கு இந்த நடவடிக்கை உதவும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.