மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தலைமை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கரோனாவால் உயிரிழந்திருந்தால், அவா்களின் கடனைத் தள்ளுபடி செய்வது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. கடன் பெற்று கரோனாவால் உயிரிழந்த விவசாயிகளின் புள்ளிவிவரங்களைத் திரட்டி வருகிறோம். இது தொடா்பாக அடுத்த ஓரிரு நாள்களில் அரசு முடிவை அறிவிக்கும். லாபத்தில் இயங்கும் மாவட்ட கடன் கூட்டுறவு வங்கிகள், தலைமை கூட்டுறவு வங்கிகளின் வரம்புக்குள் வரும் கரோனாவால் இறந்த விவசாயிகள் பெற்றிருக்கும் கடன் தொகையின் அடிப்படையில் தள்ளுபடி திட்டம் அறிவிக்கப்படும்.