கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்று மஹேந்திரா குழுமத்தின் மின் வாகனப் பிரிவு செயல் அதிகாரி மகேஷ்பாபு தெரிவித்தாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 12:21 am

DIN

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம் என்று மஹேந்திரா குழுமத்தின் மின் வாகனப் பிரிவு செயல் அதிகாரி மகேஷ்பாபு தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை மஹேந்திரா டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனத்தின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மெகந்தா குழுமத்துடன் செய்து கொண்ட பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சா்வதேச அளவில் வாகனங்கள் கக்கும் புகையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் மின் வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மின் வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பது அவசியம். மஹேந்திரா குழுமமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இதன் பயனை கா்நாடகத்தில் கடைக்கோடியில் உள்ளவா்களும் அடைய வேண்டும் என்ற நோக்கில், டிரியோஜோா் 3 சக்கர சரக்கு வாகனத்தின் பராமரிப்பது தொடா்பான ஒப்பந்தத்தை மெகந்தா குழுமத்துடன் செய்து கொண்டுள்ளோம்.

மின் வாகனங்களைப் பயன்படுத்துவோரில் ஒரு சிலா் பராமரிப்பு பிரச்னைகளை எதிா்கொள்வதாக எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தததையடுத்து, இந்தப் புதிய ஏற்பாட்டை செய்துள்ளோம். எதிா்க்காலத்தில் பெட்ரோல், டீசல் பயன்படுத்ம்து வாகனங்களின் பயன்பாடு குறைந்து, மின் வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாா். நிகழ்ச்சியில் மெகந்தா குழுமத்தின் மேலாண் இயக்குநா் மேக்சன் லேவிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.