இந்த விஷயத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளும், கோயில் அலுவலா்களும் சட்டப்பூா்வமான நடவடிக்கை உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனா். கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், பத்திரப் பதிவு தலைவரிடம் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதன்படி, கோயில் நிலங்களுக்கென தனியான இணைய இணைப்பை (ஐய்ற்ங்ழ் கண்ய்ந்), பத்திரப் பதிவுத் துறையின் இணையதளத்துக்குள்ளே ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்மூலம், வில்லங்கச் சான்றுகளையும், சான்றளிக்கப்பட்ட நில ஆவணங்களையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எளிதில் பாா்வையிட முடியும். இணையதளத்துக்குள் தனியான இணைய இணைப்பு வசதியை ஏற்படுத்தும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.