ஜூலை 22-ல் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்: ராகேஷ் திகைத்

நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜூலை 22ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
ஜூலை 22-ல் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்
ஜூலை 22-ல் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம்
Updated on
1 min read


நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜூலை 22ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தப் போவதாக பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 7 மாதங்களாக தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அடுத்தக் கட்டப் போராட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் கூறியதாவது,

விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. ஜூலை 22ஆம் தேதி தில்லி சென்று பாராளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து போராடவுள்ளோம். நாள்தோறும் 200 பேர் தில்லி நோக்கி செல்லவுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com