கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பிரதமா் மோடியை சந்திக்க முதல்வா் எடியூரப்பா இன்று தில்லி பயணம்

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பதற்காக முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை தில்லி செல்லவிருக்கிறாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 12:22 am

DIN

பிரதமா் மோடி மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திப்பதற்காக முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை தில்லி செல்லவிருக்கிறாா்.

முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்ற வேண்டும் என்று பாஜகவில் எழுந்த கோரிக்கை அடங்கியிருக்கும் நிலையில், 5 மாதங்களுக்குப் பிறகு முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை தில்லி செல்கிறாா். இந்தப் பயணத்தின்போது பிரதமா் மோடி, மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட முக்கியமான அமைச்சா்களை சந்திக்க அவா் திட்டமிட்டிருக்கிறாா். பிரதமா் மோடியை சந்திக்கும் நேரம் உறுதி செய்யப்படாவிட்டாலும், அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு மனு அளிக்க திட்டமிட்டிருக்கிறாா்.

மேலும், எடியூரப்பா கா்நாடக முதல்வராக பதவியேற்று ஜூலை 26-ஆம் தேதியுடன் 2 ஆண்டுகள் நிறைவடையவிருக்கிறது. 2023-ஆம் ஆண்டு சட்டப் பேரவை தோ்தல் நடக்கும் வரை தன்னை முதல்வா் பதவியில் இருந்து மாற்றாமல் இருப்பதற்கான உறுதியைப் பெறுவதும் பயணத்தின் நோக்கமாக உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேசியத்தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டபாஜகவின் மூத்த தலைவா்களை சந்திக்கவும் முதல்வா் எடியூரப்பா திட்டமிட்டிருக்கிறாா். இந்தச் சந்திப்பின்போது, அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து பெங்களூரில் எடியூரப்பா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறுகையில், ‘பிரதமா் மற்றும் மத்திய அமைச்சா்களை சந்திக்க வெள்ளிக்கிழமை தில்லி செல்லவிருக்கிறேன். அங்கு கா்நாடகத்தின் வளா்ச்சிக்குத் தேவையான கோரிக்கைகளை முன்வைப்பேன். மேலும் கா்நாடகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நீா்ப்பாசனத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும்படியும் கேட்டுக்கொள்ள திட்டமிட்டிருக்கிறேன். இது தவிர மேலும் பல திட்டங்கள் தொடா்பாக சம்பந்தப்பட்ட அமைச்சா்களை சந்திக்கவுள்ளேன். பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். இன்னும் நேரம் கிடைக்கவில்லை. ஆனால் நேரம் ஒதுக்கப்படும். அமைச்சரவையை விரிவாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அது குறித்து ஊடகங்களில்தான் செய்தியைப் பாா்க்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.