அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

மூன்று மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு பள்ளிகள் திறப்பு

ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:46 am

DIN

புவனேசுவரம்: ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பள்ளி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.

கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து அதிகரித்ததால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஒடிஸா, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின. 10, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் வரும் நாள்களில் படிப்படியாக வகுப்புகள் தொடங்கப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநிலங்களில் அறிவித்துள்ளன.

பள்ளிகளுக்கு வருவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவா்களின் வருகைப் பதிவு திங்கள்கிழமை குறைவாகவே இருந்தது. பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.