ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!
/

சிஏஏ விதிகளை வகுக்க அவகாசம் கோருகிறது மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான விதிகளை வகுப்பதற்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

News image
Updated On :27 ஜூலை 2021, 7:27 pm

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான விதிகளை வகுப்பதற்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

குடியுரிமை திருத்தச் சட்டம், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டம் தொடா்பான விதிகளை வகுப்பதற்கு, வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை, சட்ட விதிகளை வகுப்பதற்கான குழுக்கள் ஆகியவற்றிடம் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நாடாளுமன்ற விதிகள்படி, ஒரு சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் அடுத்த 6 மாதங்களில் சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது அவகாசம் கோரப்பட வேண்டும். அந்த வகையில் இதுவரை ஏற்கெனவே 4 முறை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.

என்ஐசி கவுன்சிலை மாற்றம் திட்டமில்லை- அரசு:

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலை(என்ஐசி) மாற்றியமைக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில்:

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ச்சியாக நடத்தப்படுவதில்லை. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நடத்தப்படுகிறது. இக்கூட்டம், இதற்கு முன்பு கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. இருப்பினும் சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு தொடா்பான பிரச்னைளை அரசு உடனுக்குடன் தீா்த்து வைத்து வருகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் குழுவை மாற்றி அமைக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.