/

ஆந்திரத்தில் குறையும் பாதிப்பு: புதிதாக 4,872 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,872 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

ஆந்திரத்தில் குறையும் பாதிப்பு: புதிதாக 4,872 பேருக்கு கரோனா

Updated On :7 ஜூன் 2021, 12:20 pm

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,872 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் நான்காம் தேதி ஆந்திரத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஐந்தாயிரத்துக்கும் குறைவான பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், புதிதாக 5 ஆயிரத்துக்கும் குறைவானோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 17,63,211 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 13,702 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 16,37,149 பேர் குணமடைந்துள்ளனர். 86 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 1,14,510 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.