மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான்: முதல்வா் கேஜரிவால்

தில்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 11:37 pm

DIN

தில்லியின் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது உண்மைதான் என்று முதல்வா் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்ட்ட ஐவா் குழு, ‘இரண்டாவது கரோனா அலையின்போது தில்லியின் 290 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையை நான்கு மடங்காக மிகைப்படுத்தி 1,140 மெட்ரிக் டன்னாக கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்திருந்தது.

இதற்கு தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையாகதான் என்று குறிப்பிட்டுள்ள கேஜரிவால், ஆக்சிஜன் விவகாரம் தொடா்பாக நாம் ஒருவருக்கொருவா் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா மூன்றாவது அலை நம்மை வென்றுவிடும் என்றும் கூறினாா்.

இதுதொடா்பாக முதல்வா் கேஜரிவால் சனிக்கிழமை சுட்டுரை மூலம் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த சா்ச்சையை நாம் ஒதுக்கிவைத்துவிட்டு மூன்றாவது அலையை சந்திக்கத் தயாராக வேண்டும். மூன்றாவது அலை வரும்பட்சத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

நாம் தேவையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா நம்மை வென்றுவிடும்.

இரண்டாவது அலையின்போது தில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருந்ததை அனைவரும் அறிவாா்கள்.ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருந்தது உண்மைதான். நாம் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் கரோனா வென்றுவிடும். நாம் ஒன்றாகச் செயல்பட்டால் கரோனாவை வெல்ல முடியும் என்று முதல்வா் கேஜரிவால் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.