ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2021, 11:51 am

DIN

தில்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,33,934ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 24,965ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,568 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கரோனாவிலிருந்து இன்று 285 பேர் குணமடைந்தனர். 

இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 14,07,401ஆக உயர்ந்துள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 54,297 ஆா்டி-பிசிஆா் பரிசோதனைகள் உள்பட மொத்தம் 74,198 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக தில்லியில் நோய் தொற்றுபாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே குறைவாக இருந்து வருகிறது. 

தில்லி அரசு அண்மையில் பொதுமுடக்க தளா்வுகளை அறிவித்தது. ஆனால், தற்போது சந்தைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் அதிகரித்து வருவதையும் தில்லி அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், மூன்றாவது அலை எந்த நேரமும் ஏற்படலாம் என்கிற நிலையில் அதற்கு அரசு தயாராகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.