அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படமா? விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடும் வழக்கத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அற

News image
கரோனா தடுப்பூசி சான்றிதழில் மோடி புகைப்படமா? விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்
Updated On :6 மார்ச் 2021, 8:00 am

DIN


புது தில்லி: சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடி புகைப்படம் அச்சிடும் வழக்கத்தை நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடந்த செவ்வாயன்று, தேர்தல் ஆணையத்திடம் பாஜகவின் பல்வேறு தேர்தல் நடத்தை விதி மீறல்தொடர்பான புகார்களை அளித்தது. அதில், கே-வின் வழியாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் அச்சிடப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் புகார் குறித்து, மேற்கு வங்க தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டிருக்கும் தேர்தல் ஆணையம், இது தொடர்பான அறிவுறுத்தலை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் ஐந்து மாநில சுகாதாரத் துறைக்கும் அனுப்பியுள்ளது.

அதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறுவதை முற்றிலும் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.