ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கரோனா: உள்ளாட்சிகள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

News image
கரோனா பரிசோதனை
Updated On :13 மார்ச் 2021, 6:28 am

DIN

கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இலவசமாக மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

கர்நாடகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு சுகாதாரக் குழுவினரை மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையுடன் இணைந்து மத்திய குழுவினர் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளும் மக்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெங்களூரு பெருநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான சந்தை, பள்ளி, கல்லூரி, வணிக வளாகம், கேளிக்கை அரங்கம் உள்ளிட்ட இடங்களில் இலவசமாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.