அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும்: பிரதமர் மோடி

​அசாமில் இடதுசாரியுடன் கூட்டணி வைப்பது கேரளத்தில் அவர்களை விமரிசிப்பது என வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமரிசித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :24 மார்ச் 2021, 10:49 am

DIN


அசாமில் இடதுசாரியுடன் கூட்டணி வைப்பது கேரளத்தில் அவர்களை விமரிசிப்பது என வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று பிரதமர் நரேந்திர மோடி விமரிசித்துள்ளார்.

அசாம் மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி இவ்வாறு கூறினார். 

அவர் மேலும் பேசியது:

"அசாம் இன்று வளர்ச்சியடைந்து ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுபட்டுள்ளது. அசாமின் அடையாளத்தை அழிக்கும் நோக்கத்தைக் கொண்டவர்களுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. அசாமின் பாரம்பரியங்கள் சிதைக்கப்பட வேண்டுமா? ஊடுருவல்களை ஊக்குவிக்கும் குழுவிடமிருந்து காங்கிரஸ் உதவிகளைப் பெறுகிறது.

தேயிலைத் தொழிலாளர்களின் கூலியை காங்கிரஸ் 100 ரூபாய்க்கு கூட உயர்த்தவில்லை. அதேசமயம், தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 ஆண்டுகளில் கூலியை இரட்டிப்பாக்கியுள்ளது. 

வாக்குக்காக காங்கிரஸ் என்ன வேண்டுமானாலும் செய்யும். இங்கு இடதுசாரியுடன் கூட்டணி அமைத்து கேரளத்தில் அவர்களை விமர்சிக்கிறது. இது மெகா கூட்டணி அல்ல. மெகா பொய்க் கூட்டணி. எந்தவொரு திட்டத்தின் பிரதிநிதியாகவும் இவர்கள் இருக்க மாட்டார்கள். இதுபோன்ற கூட்டணி ஊடுருவலையும், ஊழலையுமே உறுதி செய்யும்" என்றார் அவர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.