நாகாலாந்தில் மே 14 முதல் 7 நாள்களுக்கு முழு ஊரடங்கு
நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் மே 14 முதல் ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.


கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் மே 14 முதல் ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மே 14-ஆம் தேதி மாலை 6 மணி முதல் மே 21-ஆம் தேதி வரை ஏழு நாள்களுக்கு மாநிலத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது என்று உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் நெய்பா க்ரோனு தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று, முதல்வர் நெய்பியூ ரியோ தலைமையில் நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு காரணமாக, கரோனா வைரஸ் பரவல் சங்கிலி உடைபடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் நிலையில், முழு ஊரடங்கையடுத்து புதிய கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...