புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை

நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு தடுப்பூசி: சுகாதாரத் துறை
Updated On :13 மே 2021, 11:04 am

DIN


நாட்டில் இதுவரை 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தில்லியில் இது தொடர்பாக பேசிய சுகாதாரத் துறை இணை செயலர் லாவ் அகர்வால், முதல் தவணையாக 13.76 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட தவணையாக 3.96 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனால் இதுவரை மொத்தமாக 17.72 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் முன்களப் பணியாளர்களுக்கு 2.22 கோடியும், சுகாதாரப் பணியாளர்களுக்கு 1.62 கோடியும், 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு 13.53 கோடியும், 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 34.81 கோடி கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.