கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மேற்கு வங்கத்தில் மே 16-30 முழு ஊரடங்கு அறிவிப்பு

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

News image
மேற்கு வங்கத்தில் மே 16-30 முழு ஊரடங்கு அறிவிப்பு
Updated On :15 மே 2021, 8:37 am

PTI

மேற்கு வங்கம்

கரோனா பரவல் கடுமையாக அதிகரித்துவரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முதல் மே 30 வரை மேற்கு வங்க அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் கூறியதாவது, 

தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சில கடுமையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் மே 30 மாலை 6 மணி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலாளர் அலபன் பாண்டியோபாத்யாய் கூறியுள்ளார். 

இந்த காலகட்டத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மால்கள், பார்கள், விளையாட்டு வளாகங்கள், விடுதிகள் மற்றும் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். 

தனியார் வாகனங்கள், டாக்ஸிகள், பேருந்துகள், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களின் இயக்கமும் அடுத்த 15 நாள்களுக்கு அனுமதிக்கப்படாது.

மேலும், பெட்ரோல் பங்குகள், பால், தண்ணீர், மருந்து, மின்சாரம், சட்டம் மற்றும் ஒழுங்கு போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் ஊடகங்கள் வழக்கம்போல் செயல்படும். 

ஈ-காமர்ஸ் மற்றும் வீட்டு விநியோக சேவைகள் அனுமதிக்கப்படும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.