கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

News image
ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு
Updated On :25 மே 2021, 7:27 am

PTI


கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பிபிகஞ்ச் பகுதியில் ஜன்கல் கௌடியா என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்களும் மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். 

விரைந்து வந்த காவல்துறை மூன்று உடல்களையும் மீட்டனர். அதில், இரண்டு மகள்களின் உடல்களும் தாயின் சேலையுடன் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களது உடல்களில் எந்தக் காயமும் இல்லை என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் மாயா மற்றும் அவரது மகள்க ஷிவானி(13), அர்பிதா (9) என்பது தெரிய வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாயா, தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.