ரோஹிணி ஆற்றில் தாய், 2 மகள்கள் சடலம் மீட்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


கோராக்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கோராக்பூர் அருகே ரோஹிணி ஆற்றில் 40 வயது தாய் மற்றும் அவரது இரண்டு மகள்களின் உடல்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பிபிகஞ்ச் பகுதியில் ஜன்கல் கௌடியா என்ற இடத்தில் மூன்று பேரின் உடல்களும் மிதந்து வந்ததைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த காவல்துறை மூன்று உடல்களையும் மீட்டனர். அதில், இரண்டு மகள்களின் உடல்களும் தாயின் சேலையுடன் கட்டப்பட்டிருந்ததாகவும், அவர்களது உடல்களில் எந்தக் காயமும் இல்லை என்றும் இது தற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்கள் மாயா மற்றும் அவரது மகள்க ஷிவானி(13), அர்பிதா (9) என்பது தெரிய வந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில், மாயா, தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...