/

இறப்புச் சான்றிதழுக்காக மக்களை அலைக்கழிப்பதா?: கமல்

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

News image
கமல்ஹாசன் (கோப்புப்படம்)
Updated On :31 மே 2021, 9:12 am

DIN

மருத்துவமனைகளில் இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, 

மருத்துவமனைகளில் இறந்தவர்களின் விவரங்களை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவு செய்யாததால் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். 

வங்கி முதலீடுகள், காப்பீடுகள் மற்றும் அரசின் நிவாரணங்களைப் பெற இந்தச் சான்றிதழ் அவசியம். இதனால், அரசு உடனடியாக இதைக் கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.