தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு புதுமையான யுக்திகளை கையாள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க் கிழமை கேட்டுக்கொண்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்தும்பணிகள் மந்தமாக நடபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் அவர் பேசியதாவது, தற்போது நாடு எட்டியுள்ள தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையில் பலரது கடின உழைப்பு உள்ளது.
ஆஷா பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் பல கிராமங்களுக்குச் சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் முழு இலக்கை அடைவோம்.
கரோனா தொற்றை முழுமையாக ஒழிக்கும் வரை தொடர்ந்து போராட வேண்டும். இதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது.
கடந்த 100 ஆண்டுகளில் இது மிகப்பெரிய பேரிடர். நாடு பல சிக்கலான சவால்களை சந்தித்துள்ளது. அதுபோன்று கரோனா பெருந்தொற்றுக்கு எதிராக புதுமையான வழிகளை பின்பற்ற வேண்டும். மக்களிடம் புதுமையான முறைகளில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி முழு இலக்கை அடைய வேண்டும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேட்டூர் அணை நிலவரம்!

இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்!

திமுக - காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு மகிழ்ச்சியளிக்கிறது: ப.சிதம்பரம்

காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

