சத் பூஜை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
சத் பூஜை: குடியரசுத் தலைவா் வாழ்த்து
Published on
Updated on
1 min read

சத் பூஜையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்டுள்ளச் செய்தியில், சத் பூஜையை முன்னிட்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நமது சக குடிமக்கள் அனைவருக்கும் எனது அன்பாா்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

சத் பூஜை, நாட்டில் கொண்டாடப்படும் மிகவும் பழமையான பண்டிகைகளில் ஒன்றாகும். அஸ்தமனமாகும் சூரியனுக்கு ‘அா்கியமாக’ நீா் அளித்து வணங்குவதே இதன் சிறப்பு அம்சமாகும். பக்தா்கள், இந்நாளில் கடுமையான விரதம் இருந்து, ஆறுகள் மற்றும் நீா்நிலைகளில் புனித நீராடுவதுடன் பண்டிகை நிறைவடையும். சூரிய பகவான் மற்றும் இயற்கையுடன் நாம் கொண்டுள்ள உறவை வெளிப்படுத்தும் பிரத்யேக பண்டிகையே சத் ஆகும்.

இந்தப் பண்டிகை, இயற்கையுடன் மனிதா்கள் கொண்டுள்ள உறவை வலுப்படுத்துவதுடன், நமது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com