ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பாகிஸ்தானா? சீனாவா? இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நாடு எது?: விபின் ராவத் பதில்

இந்திய, சீனாவுக்கிடையேயான எல்லை சச்சரவை தீர்ப்பதில் நம்பிக்கையின்மையும் அதிகரித்துவரும் அவநம்பிக்கையும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2021, 12:20 pm

DIN

இந்திய பாதுகாப்புக்கு மிகபெரிய அச்சுறுத்தலாக சீனா மாறியுள்ளது என முப்படை தலைமை தளபதி விபின் ராவத் தெரிவித்துள்ளார். இமாலய மலைப்பகுதியை காப்பாற்றும் வகையில் கடந்தாண்டு அங்கு விரைவாக குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் ராணுவ தளத்திற்கு மீண்டும் திரும்புவதற்கு நீண்ட காலமாகும் என்றும் விபின் குறிப்பிட்டுள்ளார்.

சீன விவகாரம் குறித்து வியாழக்கிழமை மாலை விரிவாக பேசிய ராவத், "அணு ஆயுத நாடுகளான இந்திய, சீனாவுக்கிடையேயான எல்லை சச்சரவை தீர்ப்பதில் நம்பிக்கையின்மையும் அதிகரித்துவரும் அவநம்பிக்கையும் முக்கிய பிரச்னையாக இருக்கிறது" என்றார்.

கடந்த மாதம், இந்திய, சீன கமாண்டர்களுக்கிடையே 13ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், எல்லையிலிருந்து படைகளை எப்படி விலக்கி கொள்வது என்பதில் இருநாடுகளுக்கிடையே ஒத்த கருத்து ஏற்படாத நிலையில், எந்த வித தீர்வும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது.

கடந்த மே மாதம், இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோசமான மோதல் வெடித்தது. ஜூன் மாதம் 3,488 கிலோமீட்டர் எல்லையில் நடந்த மோதலில் 20 இந்தியர்களும் குறைந்தது நான்கு சீன ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக, நீண்ட கால எதிரியான பாகிஸ்தானிலிருந்து தனது கவனத்தை இந்தியா சீனா மீது திருப்பியது.

இதையடுத்து, இமாலாய மலைப்பகுதி அருகே, இந்தியாவும் சீனாவும் உள்கட்டமைப்பை வலுப்படுத்த தொடங்கியது. வீரர்களை குவித்தது. இதுகுறித்து பேசிய விபின் ராவத், "எல்லையிலும், கடலிலும் எந்த அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது" என்றார்.

திபெத் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திற்கும் நடுவே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா பெரிய கிராமத்தை எழுப்பியுள்ளதாக அமெரிக்க ராணுவம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.