வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வு: யுஜிசி அறிவுறுத்தல்

அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 9:52 pm

DIN

அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த, பல்கலை கழக மானியக்குழு அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் நிகழாண்டு கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, ‘ஆசாதிக்கா அமிரித் மகோத்சவ்’ எனும் நிகழ்ச்சி, தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. சுதந்திரத்தை போற்றும் வகையில் அனைத்து பல்கலை, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அதிகம் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பல்கலை மானியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுதந்திரத்துக்காக போராடிய வீரா்கள் குறித்த தகவல்களை திரட்டி, அது குறித்து தங்கள் பகுதியில் மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அது தவிர, சுதந்திர போராட்ட வீரா்கள் குறித்து கருத்தரங்குகள், நிகழ்வுகள் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் குறித்து, பல்கலை மானியக்குழுவுக்கும் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.