கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

27 ஆண்டுகளுக்குப் பின்.. தனது முகவரியைக் கண்டடைந்த ஆறு

கர்நாடக மாநிலத்தில் துமக்குரு பகுதியில் 27 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜெயமங்கலி ஆறு, தனது முகவரியை மீண்டும் கண்டடைந்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :24 நவம்பர் 2021, 12:40 pm

DIN

துமக்குரு: கர்நாடக மாநிலத்தில் துமக்குரு பகுதியில் 27 ஆண்டுகளுக்கு முன் மாயமான ஜெயமங்கலி ஆறு, தனது முகவரியை மீண்டும் கண்டடைந்துள்ளது. 

இதற்குக் காரணமாக அமைந்த, கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் பெய்த பெருமழைக்கு நன்றி சொல்லிக் கொண்டே சீறிப் பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறது ஜெயமங்கலி ஆறு.

கோடைக்காலத்தில் நீரின்றி வறண்டுகிடந்த ஆறுகளையும் ஏரிகளையும் குளங்களையும் நிலப்பரப்புகளாக மாற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றிவிடுகிறோம். பிறகு, மழைக்காலம் வந்ததும், குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்துவிட்டதாக மழை மற்றும் வெள்ளத்தின் மீது குற்றம்சுமத்துகிறோம். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு மீம் அவ்வப்போது வெளியாகும்.. வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்திருக்கும் வெள்ளம், அது தனது நீர்நிலையை தேடி அலைவதாகச் சொல்லும் வகையில் அமைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே.. வாகனங்களின் பிஎச் பதிவு: மாநிலங்களுக்கு மற்றொரு நிதி இழப்பு ஆபத்து?

அது ஒரு மீமாக இருந்தாலும், மறைக்கவோ மறுக்கவோ முடியாத முற்றிலுமான உண்மை.

இந்த வகையில், சுமார் 27 ஆண்டுகளாக நீரின்றி வறண்டு போயிருந்த துமக்குரு ஆற்றில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணைகளைத் தாண்டி ஆர்ப்பரித்துக் கொண்டும் வெள்ள நீரைக் காண அப்பகுதிகளில் நாள்தோறும் ஏராளமானோர் குவிந்து வருகிறார்கள்.

அந்த ஆறு கடந்து வரும் பகுதிகளைச் சேர்ந்த வயதான மக்கள், தங்களது இளமைப் பருவத்தில், இந்த ஆறு ஓடிக் கொண்டிருந்தது நினைவிருப்பதாகவும், ஆனால் அப்போது கூட இந்த அளவுக்கு அதில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொண்டு சென்றதை பார்த்ததில்லை என்று தங்களது நினைவலைகளை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த ஆற்றங்கரையோரம் எந்த விவசாயப் பகுதியோ, வனப்பகுதியோ இல்லை. அதுமட்டுமல்ல, இந்த ஆறு ஓடும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான கட்டுமானங்களால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இது விரைவில் வறண்டு போய் விடுமோ என்றும் மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.