
ஆந்திரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஆந்திரத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 865 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,51,988ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,578 பேருக்கு கரோனா
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,195ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,424 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 20,27,229 அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | கேரளத்தில் ஒரேநாளில் 13,217 பேருக்கு கரோனா
கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 10,574 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.