கேரளத்தில் ஒரேநாளில் 13,217 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 13,217 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
கேரளத்தில் ஒரேநாளில் 13,217 பேருக்கு கரோனா

கேரளத்தில் ஒரேநாளில் 13,217 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 96,835 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 13,217 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

அதிகபட்சமாக எர்ணாகுளத்தில் 1,730 பேரும், திருவனந்தபுரத்தில் 1,584 பேரும், திரிச்சூரில் 1,579 பேரும், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவால் இன்று மேலும் 121 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25,303 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போதைய நிலவரப்படி 1,41,155 சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 14,437 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 45,40,866 ஆக உயர்ந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் 4,20,556 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com