தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

வாக்களித்தவர்களுக்கு நன்றி; நந்திகிராம் தோல்வி ஒரு சதிவேலை - மம்தா பானர்ஜி உரை

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

News image
Updated On :3 அக்டோபர் 2021, 4:37 pm IST

பவானிபூர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதையடுத்து, வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். 

மேற்குவங்கத்தில் பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பவானிபூர் தொகுதியில் தொடக்கம் முதலே முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அவர், வாக்கு எண்ணிக்கையின் 21 சுற்றுகள் முடிவில், பாஜக வேட்பாளர் பிரியங்கா டிப்ரேவாலை 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொண்டுள்ளார். 

முன்னதாகவே, இன்று காலை முதலே கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூடினர். வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் வெளியே வந்த மம்தா பானர்ஜி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

அப்போது, 'இடைத்தேர்தலில் வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி, பவானிபூர் தொகுதியில் 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். நந்திகிராம் தொகுதியில் நான் தோல்வியடைந்தது ஒரு சதிவேலை. 

இடைத்தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஜாங்கிபூர், சம்சர்கஞ்ச் ஆகிய தொகுதிகளிலும் திரிணமூல் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.