கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,735 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் மட்டும் 151 பேர் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கேரளத்தில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 9,735 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 151 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,677-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் புதிதாக 1,449 பேருக்கு கரோனா; 16 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் 13,878 பேர் குணமடைந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 1,24,441 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.