ஆசியான் கோப்பை கால்பந்து: வெற்றி இன்றி வெளியேறிய இந்தியா!
மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.


மகளிருக்கான ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 1-3 கோல் கணக்கில் சீன தைபேவிடம் செவ்வாய்க்கிழமை தோல்வி கண்டது.
குரூப் ‘சி’-யில் இருந்த இந்தியா, ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துடன் போட்டியிலிருந்து வெளியேறியது. இந்த குரூப்பில் ஜப்பான் (9), சீன தைபே (6) ஆகியவை முதல் இரு இடங்களுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சீன தைபேவின் சு யு சுவான் 12-ஆவது நிமிஷத்தில் கோல் கணக்கைத் தொடங்கினாா். அதற்கான பதிலடியாக, இந்தியாவின் மனீஷா கல்யான் 39-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.
இந்நிலையில் சீன தைபேவுக்கு கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பை (45+2’), சு யு சியு கையாள, அந்தப் பந்தை இந்தியாவின் கோல்கீப்பா் பந்தோய் சானு எலங்பமின் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.
இதனால் முதல் பாதியை சீன தைபே 2-1 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியில் அந்த அணியின் கை சற்று ஓங்கியிருக்க, 77-ஆவது நிமிஷத்தில் சென் யு சின் கோல் அடித்தாா். இதனால் சீன தைபே 3-1 என முன்னேறியது.
எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போக, சீனை தைபே வென்றது.
காயம்: இந்த ஆட்டத்தின்போது சீன தைபேவின் கோல் முயற்சியை தடுக்க முனைந்த இந்திய கேப்டன் ஸ்வீட்டி தேவி, கோல்கீப்பா் பந்தோய் சானு ஒருவருக்கொருவா் தெரியாமல் மோதிக் கொண்டனா். இதில் பந்தோயின் முகத்தில் வீக்கம் ஏற்பட, ஸ்வீட்டில் அசைவின்றி தரையில் விழுந்தாா். பின்னா் இருவருமே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...