இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முன்கூட்டியே கிடைத்த தகவல்; நான்கே நிமிடங்களில் விரைந்து சென்று காப்பாற்றிய காவல்துறை

தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்த நிலையில், நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.

News image
கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2021, 7:15 am

DIN

சரியான நேரத்தில் தில்லி காவல்துறையினர் சென்றதால் ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு தில்லியில் ஜாமியா நகரில் பணப் பிரச்னை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆட்டோ ரிக்சா ஓட்டுநரை தில்லி காலவ்துறையைச் சேர்ந்த இருவர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்ததாகவும் நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்றதாகவும் தில்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் மேலும் கூறுகையில், "சார்பு ஆய்வாளர் ராமதாஸ், தலைமை காவலர் மகேந்திர சிங் ஆகியோர் அப்பெண்ணின வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். உள்ளிருந்து தாழிடப்பட்ட அறைவின் கதவுகளை உடைத்து காவல்துறையினர் உள்ளே சென்றனர். 

அந்த நபரை காப்பாற்றிய பிறகு, எதற்கு தற்கொலை முயற்சி எடுத்துள்ளீர்கள் என காவல்துறையினர் அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், தனக்கு பண நெருக்கடி ஏற்பட்டதாகவும் தனது ஆட்டோவை விற்க தாய் முயற்சித்ததாகவும் அவர் பதிலளித்தார். 

(தற்கொலை ஒரு போதும் பிரச்னைக்கு தீர்வளிக்காது. தற்கொலை எண்ணம் உள்ளவர் அருகில் உள்ள மன நல சிறப்பு மருத்துவரை தொடர் கொள்ளுங்கள். உதவிக்கு, 9999666555 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.