ஜம்மு - காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்கள்: துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு திட்டங்களுக்கு துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
Published on
Updated on
1 min read

ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு திட்டங்களுக்கு துபை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் கூறுகையில்,

“ஜம்மு - காஷ்மீரில் ரியல் எஸ்டேட் மேம்பாடு, தொழில்துறை பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப கோபுரங்கள், பல்நோக்கு கோபுரங்கள், தளவாடங்கள், மருத்துவக் கல்லூரி, பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மேற்கொள்வதற்காக துபை அரசுடன் ஜம்மு - காஷ்மீர் நிர்வாகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.”

மேலும், இந்நிகழ்வில் மத்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல், துபை அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com