இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பஞ்சாப்: காவல்துறை அதிகாரியின் கார் மோதியதில் பெண் பலி; ஒருவர் படுகாயம்

பஞ்சாப் மாநில காவல்துறை ஆய்வாளர் மிக வேகமாக ஓட்டி வந்த கார், சாலையைக் கடக்க சாலையோரம் நின்றிருந்த இரண்டு பெண்கள் மீது தூக்கி வீசியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

News image
பஞ்சாப்: காவல்துறை அதிகாரியின் கார் மோதியதில் பெண் பலி; ஒருவர் படுகாயம்
Updated On :18 அக்டோபர் 2021, 11:20 am

DIN


சண்டிகர்: பஞ்சாப் மாநில காவல்துறை ஆய்வாளர் மிக வேகமாக ஓட்டி வந்த கார், சாலையைக் கடக்க சாலையோரம் நின்றிருந்த இரண்டு பெண்கள் மீது தூக்கி வீசியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

ஜலந்தர் - பக்வாரா தேசிய நெடுஞ்சாலையில், தானேவாலி கிராமத்துக்கு அருகே, சாலையைக் கடக்க இரண்டு பெண்களும் சாலையோரம் நின்றிருந்த போது, அவர்களை வேகமாக வந்த கார் தூக்கி வீசியது. ஒருவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாக, மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த பெண் நவ்ஜோத் கௌர் என்பதும், உள்ளூரில் உள்ள கார் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

விபத்தை ஏற்படுத்திய கார் அம்ரித் பால் சிங் ஓட்டி வந்தது என்பதும், அவர் பஞ்சாப் காவல்துறையில் ஹரிகே பட்டன் பகுதியில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. விபத்தை ஏற்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தைக் கண்டித்து உள்ளூர் மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சியில் விபத்து நடந்தது பதிவாகியுள்ளது. அதில், இரண்டு பெண்கள் சாலையைக் கடக்க சாலையோரம் நிற்கிறார்கள். ஒரு கார் வேகமாக தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் சற்று பின்வாங்கி நிற்கிறார்கள். அப்போது அங்கே மிக வேகமாக வந்த வெள்ளை நிற கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையைக் கடக்க காத்திருந்த இரண்டு பெண்கள் மீது மோதுகிறது. அதில் ஒரு பெண் தூக்கி வீசப்பட்டு, சாலைத் தடுப்பின் மீது விழுந்து சரிகிறாள். மற்றொரு பெண் இங்கேயே தூக்கி வீசப்படுகிறார்.  இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, கடும் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.