சம்பவம் நடந்த இடத்திலிருந்து சிசிடிவி காட்சியில் விபத்து நடந்தது பதிவாகியுள்ளது. அதில், இரண்டு பெண்கள் சாலையைக் கடக்க சாலையோரம் நிற்கிறார்கள். ஒரு கார் வேகமாக தங்களை நோக்கி வருவதைப் பார்த்ததும் சற்று பின்வாங்கி நிற்கிறார்கள். அப்போது அங்கே மிக வேகமாக வந்த வெள்ளை நிற கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையைக் கடக்க காத்திருந்த இரண்டு பெண்கள் மீது மோதுகிறது. அதில் ஒரு பெண் தூக்கி வீசப்பட்டு, சாலைத் தடுப்பின் மீது விழுந்து சரிகிறாள். மற்றொரு பெண் இங்கேயே தூக்கி வீசப்படுகிறார். இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு, கடும் விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.