கர்நாடகத்தில் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு விரைவில் அறிவிப்பை வெளியிடும் என முதல்வர் பசவராஜ் பொம்மை திங்கள்கிழமை தெரிவித்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:
"நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை சமர்பித்து விட்டது. நாங்கள் உத்தரவு பிறப்பிப்போம். பள்ளிகள் திறப்பு மற்றும் அதுபற்றிய அனைத்து விவரங்கள் குறித்தும் கல்வித் துறையுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துவார். இதன்பிறகு, 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார் பொம்மை.
இதையும் படிக்க | புதுவையில் பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோா், மாணவா்கள் குழப்பம்
கர்நாடகத்தில் கரோனா தொற்று குறையத் தொடங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 முதல் 9-12 வகுப்புகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. 6-8 வகுப்புகளுக்குக் கடந்த செப்டம்பர் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முதல்வர் விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்? டிடிவி தினகரன்
உயர்கல்வி தேர்வு! விழிப்புணர்வின்மை, தெளிவின்மை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



