தில்லியில் திங்கள்கிழமை முதல் பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் இணைய வழியாகவும் நேரடியாகவும் நடத்தப்படவுள்ளது.


தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை முதல் திறக்கப்படும் என அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு வரலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கட்டாயப்படுத்த மாட்டார்கள். ஏனெனில் நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் நடத்தப்படும்.
50 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் ஒரே நேரத்தில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அழைக்கப்பட மாட்டார்கள். பள்ளிகள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்ய வேண்டும், குறைந்தது 98 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி போட்டுள்ளனர்" என்றார்.
இதையும் படிக்க | பெகாஸஸ் விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தில்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அலுவலர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்ட பிறகு, மணிஷ் சிசோடியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது, 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே நேரடி வகுப்பு நடத்தப்பட்டுவருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...