சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மற்ற மாதங்களை முந்திய ஆகஸ்ட்: 18.6 கோடி பேருக்குத் தடுப்பூசி

தடுப்பூசியில் ஏராளமான சிறப்பு நிகழ்வுகள் ஆகஸ்டில் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.6 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

News image
மற்ற மாதங்களை முந்திய ஆகஸ்ட்
Updated On :1 செப்டம்பர் 2021, 11:02 am

DIN


ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 18.6 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

நேற்று (ஆக. 31) ஒரு நாளில் மட்டும் 1.33 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், மற்ற மாதங்களை ஒப்பிடுகையில் ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மற்ற எல்லா மாதங்களையும் முந்தியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடியோ ஒன்றை தமது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆகஸ்ட் மாதம் முழுவதும் 18.6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

ஜூலை மாதத்தில் 13.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதே அதிகபட்சமாக இருந்தது. ஜூன் மாதம் 12 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. 

அதிகபட்சமாக 21 முதல் 27-ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 4.66 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. சராசரியாக ஒரு நாளில் 66.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாட்டில் 50 சதவிகிதம் மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கு எட்டப்பட்டது. இது ஆகஸ்ட் 26-ம் தேதியன்று எட்டப்பட்டது. 

ஹிமாசலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியான அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 29-ம் தேதியில் நடந்தது.

இலவச தடுப்பூசிக்காக 90 சதவிகிதம் கரோனா தடுப்பூசி வலைதள பக்கங்கள் அரசால் நிர்வகிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் மாதத்தில் அதிக அளவு கரோனா தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்பட்டன. சராசரியாக நாள்தோறும் 3.7 கோடி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டன. 

அங்கலேஷ்வர் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கோவேக்ஸின் ஆகஸ்ட் 29-ம் தேதி பயன்பாட்டிற்கு பெறப்பட்டது. 

அவசர கால பயன்பாட்டிற்காக சைகோவ்-டி என்ற கரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.