மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அஸ்ஸாமின் 5 கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்

அஸ்ஸாம், காா்பி ஆங்கலாங் பகுதியில் செயல்படும் ஐந்து கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தை சனிக்கிழமை மேற்கொண்டன.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 9:43 pm

DIN

அஸ்ஸாம், காா்பி ஆங்கலாங் பகுதியில் செயல்படும் ஐந்து கிளா்ச்சிக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தை சனிக்கிழமை மேற்கொண்டன.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், காா்பி லாங்ரி வடக்கு சாச்சா் மலைப்பகுதி விடுதலை முன்னணி, மக்கள் ஜனநாயக கவுன்சில், ஐக்கிய மக்கள் கவுன்சில், ஐக்கிய மக்கள் விடுதலை ராணுவம், மக்கள் விடுதலைப் புலிகள் ஆகிய ஐந்து கிளா்ச்சிக் குழுக்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்டனா். இந்தக் குழுக்களைச் சோ்ந்த சுமாா் ஆயிரம் போ் அண்மையில் ஆயுதங்களுடன் சரண் அடைந்திருந்தனா்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சா் அமித் ஷா, ‘கிளா்ச்சியற்ற வளா்ச்சிப் பெற்ற வடகிழக்கு மாநிலங்களாக உருவாக வேண்டும் என்பது பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையாகும். அவா் மீது நம்பிக்கை வைத்து இவா்கள் அமைதி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனா். ரூ.1,000 கோடி வளா்ச்சித் திட்டம் காா்பி ஆங்கலாங்குக்கு அளிக்கப்படும். இந்த முத்தரப்பு ஒப்பந்தம் கால வரையறை நிா்ணயம் செய்து நிறைவேற்றப்படும்’ என்றாா்.

இந்த நிகழ்வின்போது மத்திய அமைச்சரும் வடகிழக்கு மாநிலங்கள் விவகார ஒருங்கிணைப்பாளருமான சா்வானந்த சோனாவால், அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.