மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமலாக்கத்துறை நோட்டீஸுக்கு எதிராக பிளிப்கார்ட் இணை நிறுவனர் வழக்கு

வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக பிளிப்கார்ட், அதன் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு அமலாக்குத்துறை கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது. 

News image
கோப்புப்படம்
Updated On :4 செப்டம்பர் 2021, 11:31 am

DIN

வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸூக்கு எதிராக பிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2009 முதல் 2015 வரை, வெளிநாட்டு முதலீட்டு சட்டங்களை மீறியதாக எழுப்பப்படும் புகாரில் 10,600 கோடி அபராதத்தை ஏன் உங்களுக்கு வதிக்கக் கூடாது என பிளிப்கார்ட், அதன் நிறுவனர்கள், முதலீட்டாளர்கள் சிலருக்கு அமலாக்கத்துறை ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, நோட்டீஸை ரத்து செய்யக் கோரி பன்சால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கத்திற்கு மாறான காலதாமதத்திற்கு பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். முன்னதாக, குற்றச்சாடு குறித்து விளக்கம் அளித்த பிளிப்கார்ட், "இந்திய சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டே செயல்பட்டுவருகிறோம். சம்மந்தப்பட்ட துறைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என தெரிவித்தது.

வெளிநாட்டு முதலீட்டு சட்டத்தின்படி, பல்வேறு நிறுவனங்களின் பலதரப்பட்ட பொருள்களை விற்கும் சில்லரை வர்த்தக நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  ஆனால், பிளிப்கார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்ள் இச்சட்டங்களை மீறியதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பல ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டுவருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு, பிளிப்கார்ட்டின் பெரும்பான்மை பங்குளை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வால்மார்ட் நிறுவனம் வாங்கியது. அப்போது, சச்சின் பன்சால் பங்குகளை விற்ற நிலையில், சிறிய அளவிலான தன்னுடைய பங்கினை பின்னி பன்சால் தக்கவைத்துக் கொண்டார். சட்டத்தின்படி, பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கில்தான் விசாரணை தற்போது நடைபெற்றுவருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.