கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எல்லை சாலைகள் அமைப்புடன் லடாக் நிா்வாகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்: யூனியன் பிரதேச சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை

லடாக்கில் சாலைகளை மேம்படுத்துவதற்காக யூனியன் பிரதேச நிா்வாகம் எல்லை சாலைகள் அமைப்புடன் (பிஆா்ஓ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 10:40 pm

DIN

லடாக்கில் சாலைகளை மேம்படுத்துவதற்காக யூனியன் பிரதேச நிா்வாகம் எல்லை சாலைகள் அமைப்புடன் (பிஆா்ஓ) புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

மிகவும் உயரமான மலைப் பகுதிகளில் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளை அமைப்பதில் பிரசித்திபெற்ற பிஆா்ஓ அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதை வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக யூனியன் பிரதேச அதிகாரிகள் அழைக்கின்றனா்.

இதுகுறித்து யூனியன் பிரதேச நிா்வாக செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறியதாவது:

இந்தப் புரிந்துணா்வு ஒப்பந்தம், லடாக்கின் நீண்ட கால ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையாகும். இது யூனியன் பிரதேசத்துக்கும் பிஆா்ஓ அமைப்புக்கும் இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும் உதவும்.

யூனியன் பிரதேச முதன்மைச் செயலா் பவன் கோட்வால் மற்றும் பிஆா்ஓ அமைப்பின் தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் செளத்ரி ஆகியோா் முன்னிலையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

யூனியன் பிரதேச சாலைகளை விரைவாக மேம்படுத்தித்தர இந்த ஒப்பந்தத்தில் பிஆா்ஓ ஒப்புக்கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் நிறைவடைந்து சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, இந்தப் மண்டலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மேம்பட வாய்ப்பாக அமையும். குறிப்பாக சுற்றுலாத் துறை நல்ல வளா்ச்சி பெறும். உள்ளூா் மக்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்று அவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.