அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கொல்கத்தாவில் பாஜக எம்பி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு

மேற்குவங்கம் ஜகதடலில் உள்ள பாஜக எம்பி வீட்டில் வெடுகுண்டுகள் வீசப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :8 செப்டம்பர் 2021, 5:36 am

DIN

மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள பாஜக எம்பி அர்ஜுன் சிங்கின் வீட்டருகே இன்று காலை மூன்று வெடுகுண்டுகள் வீசப்பட்டது. நல்வாய்ப்பாக இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குண்டு வீச்சில் ஈடுபட்டவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜகதடலில் அமைந்துள்ள அர்ஜுன் சிங்கின் வீட்டுக்கு பைக்கில் சென்ற மூவர் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. காலை 6:30 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. குண்டு வீச்சு பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், வீட்டின் முன்புள்ள வாயலில் சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், குண்டு வீச்சு குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தில்லிக்கு சென்றுள்ள அர்ஜுன் சிங், குண்டு வீச்சு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இன்று மாலையே, அவர் கொல்கத்தாவிற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவம் என மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் விமரிசித்துள்ளார். மேலும், இதுகுறித்து முதலமைச்சர் மம்தாவிடம் கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ், இது உட்கட்சி பூசலால் நிகழ்ந்தது என பரஸ்பர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.

திரிணாமுல் எம்எல்ஏவாக இருந்த அர்ஜுன் சிங், கடந்த 2019ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக தேர்ந்தேடுக்கப்பட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.