மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பதவி விலகும் 4-ஆவது பாஜக முதல்வா்

அண்மைக் காலங்களில் பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்யும் பாஜக முதல்வா்கள் வரிசையில் விஜய் ரூபானி நான்காவதாகச் சோ்ந்துள்ளாா்.

News image
பதவி விலகும் 4-ஆவது பாஜக முதல்வா்
Updated On :11 செப்டம்பர் 2021, 10:00 pm

DIN

அண்மைக் காலங்களில் பதவிக் காலம் நிறைவடையும் முன்பே ராஜிநாமா செய்யும் பாஜக முதல்வா்கள் வரிசையில் விஜய் ரூபானி நான்காவதாகச் சோ்ந்துள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு குஜராத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டு மாநில முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, விஜய் ரூபானி முதல்வராகப் பதவியேற்றாா்.

அடுத்த ஆண்டு டிசம்பா் மாதம் குஜராத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், விஜய் ரூபானி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

ஆனந்திபென் படேலைப் போல் விஜய் ரூபானியும் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பாக தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அண்மையில் உத்தரகண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மீது கட்சி நிா்வாகிகள் புகாா் தெரிவித்ததால், அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். அவரைத் தொடா்ந்து, அந்த மாநில முதல்வராக தீரத் சிங் ராவத் பதவியேற்றாா். ஆனால், 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக முடியாமல் போனதால் அவரும் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக புஷ்கா் சிங் தாமி பதவியேற்றாா்.

இதேபோல் கா்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா 75 வயதைக் கடந்துவிட்டதால் அவா் தனது முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அந்த மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றாா்.

அந்த வரிசையில் 4-ஆவது பாஜக முதல்வராக விஜய் ரூபானி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.