தில்லியில் புதிதாக 22 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 61,968 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 22 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 0.04 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோா் எண்ணிக்கை 73.82 கோடியைக் கடந்தது
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 44 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர்கூட நோய்த் தொற்றால் உயிரிழக்கவில்லை.
இதைத் தொடர்ந்து, தில்லியில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,38,233 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,12,760 பேர் குணமடைந்துவிட்டனர். பலி எண்ணிக்கை 25,083 ஆகவே உள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 390 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.