தொலைத்தொடர்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு இருந்த நிலையில் தற்போது அது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்துறையில் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்யலாம். அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், 100% அந்நிய நேரடி முதலீட்டிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் கூறினார்.
இதுதவிர, நிறுவனங்கள் தங்களுடைய மீதித்தொகையை செலுத்த 4 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளை, தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சந்தானம் வித்யாலயா பள்ளி மாணவருக்குப் பாராட்டு

புகாா் மீது நடவடிக்கை எடுக்க லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

