தொலைத்தொடர்புத் துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தொலைத்தொடர்புத் துறையில் 49% அந்நிய நேரடி முதலீடு இருந்த நிலையில் தற்போது அது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்துறையில் நிறுவனங்கள் மத்திய அரசின் அனுமதியின்றி நேரடியாக முதலீடு செய்யலாம். அதேநேரத்தில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாட்டில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்று மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மேலும், 100% அந்நிய நேரடி முதலீட்டிலும் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் பொருந்தும் என்றும் கூறினார்.
இதுதவிர, நிறுவனங்கள் தங்களுடைய மீதித்தொகையை செலுத்த 4 வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய பதிவுகளை, தகவல்களை டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

