விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திரிணமூல் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர்

பாஜகவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News image

திரிணமூல் கட்சியில் இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ

Updated On :18 செப்டம்பர் 2021, 10:20 am

DIN

பாஜகவுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த மேற்குவங்க நாடாளுமன்ற உறுப்பினர் பாபுல் சுப்ரியோ சனிக்கிழமை திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த ஜூலை மாதம் மாற்றியமைக்கபட்டபோது பாபுல் சுப்ரியோவிடமிருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த அவர் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

மேலும், மேற்கு வங்க பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் தொடங்கியதிலிருந்து மாநில பாஜக தலைவா்களுடன் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக இருந்த அவர் தனது முடிவைக் கைவிட்டார். இந்நிலையில் பாபுல் சுப்ரியோ திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் டீரக் ஓபிரைன் முன்னிலையில் திரிணமூல் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.