கனடா நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ள ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
கனடாவில் 2023 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தேர்தலை அறிவித்தார் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. கரோனாவுக்கு எதிராக தன்னுடைய அரசு சிறப்பாக செயலாற்றியதை தன்வசமாக்க நினைத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியைமைப்பதற்குத் தேவையான 170 இடங்கள் அன்றி முந்தைய தேர்தலைப் போலவே 157 இடங்கள் பெற்றது. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டீன் ட்ரூடோ மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இதையும் படிக்க | கனடா தோ்தலில் பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கட்சி வெற்றி
இதையடுத்து, பல்வேறு நாட்டுத் தலைவர்கள், ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தேர்தலில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. இந்தியா-கனடா உறவுகளை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து உங்களுடன் பணியாற்ற எதிர்நோக்குகிறேன். அத்துடன் உலகளாவிய மற்றும் பலதரப்பட்ட பிரச்னைகளில் நம்முடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | கனடா நாடாளுமன்றத் தோ்தல்: 17 இந்திய வம்சாவளியினா் வெற்றி