இந்தியாவில் இன்று மேலும் 40,134 பேருக்கு கரோனா 

இந்தியாவில் இன்று மேலும் 40,134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  
இந்தியாவில் இன்று மேலும் 40,134 பேருக்கு கரோனா 

இந்தியாவில் இன்று மேலும் 40,134 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,134 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 422 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா்.

இதனால் மொத்த உயிரிழப்பு 4,24,773 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 36,946 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,08,57,467 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,13,718 ஆக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 17,06,598 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை 47,22,23,639 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 
நேற்று மட்டும் 14,28,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 46,96,45,494 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com