தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஆப்கன் வான்வெளி எல்லை மூடல்: இந்தியா வரும் விமானங்களுக்கு சிக்கல்

ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை மூடப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு வரும் விமானங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
ஏர் இந்தியா
Updated On :18 ஆகஸ்ட் 2021, 7:41 am

ANI

ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை மூடப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கு வரும் விமானங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கன் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து ஆப்கன் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டு மக்கள் பலர் காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.

மேலும், விமானங்கள் அனைத்திலும் முந்தியடித்து கொண்டு ஏறுவதால் நிலைமை கையை மீறியுள்ளது. இதையடுத்து, காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க படையினர், கூட்டத்தை கட்டுப்படுத்த வானை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.   

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு, வான்வெளி எல்லை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிகாகோவிலிருந்து ஆப்கானிஸ்தான் வான்வெளி எல்லை வழியாக தில்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியாவின் விமானம் வளைகுடா வான்வெளி எல்லைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.