2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், கல்வித்துறையின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி,
► நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.
► லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
► மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் தொடங்கப்படும்.
► அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
► தேசிய கல்வி கொள்கையின் கீழ் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மேம்படுத்தப்படும்.
► நாடு முழுவதும் 100 ராணுவப் பள்ளிகள் திறக்கப்படும்.
► ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
► தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
திருக்குறளை மேற்கோள் காட்டி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!
75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு: நிர்மலா சீதாராமன்
டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு!
ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்திய தேசிய ரயில் திட்டம் 2030: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கரோனா தடுப்பூசிக்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு!
ரூ. 64,180 கோடியில் சுயசார்பு ஆரோக்கியத் திட்டம்: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு