ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திகி கடைசியாக பதிவிட்ட விடியோ வைரலாகி வருகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் மும்பையை சேர்ந்த டேனிஷ் சித்திகி, ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்களை புகைப்படம் எடுக்கச் சென்ற இந்திய புகைப்படக் கலைஞர்களின் குழுவில் இடம்பெற்றிருந்தார்.
இதையும் படிக்கலாமே: மனசாட்சியை உலுக்கிய புகைப்படக்காரர் டேனிஷ் சித்திகி
ஆப்கனின் கந்தகர் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் சென்று தலிபான்கள் தாக்குதலை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது தலிபான்களின் தாக்குதலில் நேற்று இரவு பலியானார்.
இந்நிலையில் அவர் கடைசியாக டிவிட்டரில் பதிவிட்டிருந்த காணொலி தற்போது வைராலாகி வருகின்றது.
சித்திகி கடந்த செவ்வாய்க்கிழமை(ஜூலை 13) டிவிட்டரில் ஒரு காணொலியை பதிவிட்டு,
சிறப்பு பாதுகாப்புப் படையினருடன் சென்று கொண்டிருந்த போது, தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளானோம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம். மேலும், ராக்கெட் குண்டு மூலம் தாக்கப்பட்டதை படம் பிடித்துள்ளேன் என விடியோவையும் பதிவிட்டிருந்தார்.