தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் எது?

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் எது?

Published On :28 ஜனவரி 2024, 8:56 am IST


புது தில்லி: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று புது தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியும் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் இருந்தனர்.

சோனியா காந்தியுடனான சந்திப்பில், முதல்வர் ஸ்டாலின் பொன்னாடை மற்றும் ஒரு புத்தகத்தையும் பரிசளித்தார். அந்த புத்தகத்தின் பெயர் 'ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இன்டஸ் டு வைகை' என்பதாகும். 

இந்தப் புத்தகத்தை எழுதியவர் இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஆர். பாலகிருஷ்ணன். இந்திய ஆட்சிப் பணியில் பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை என பல்வேறு உயர் பதவிகளை வகித்து, ஓய்வுபெற்ற பிறகு ஒடிசா மாநில அரசின் ஆலோசகராக பணியாற்றி வரும் இவர், சிந்து சமவெளி பண்பாட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளார். சிறந்த எழுத்தாளர், இசைப்பாடல்கள், ஊர்ப் பெயர் ஆராய்ச்சி என பல்வேறு துறைகளில் தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இவர் எழுதியிருக்கும் 'ஜர்னி ஆஃப் ய சிவிலைசேஷன்: இன்டஸ் டு வைகை' புத்தகம் சிந்து முதல் வைகை நதி வரையிலான ஒரு நாகரீகத்தின் பயணத்தை விலக்குவதாக அமைந்துள்ளது. 

இந்தப் புத்தகம் பற்றி ஆர். பாலகிருஷ்ணன் கூறுகையில், சிந்து வெளிவிட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் என்பதே. இது இரண்டும் ஒன்றே. இந்தியவியலின் இருபெரும் புதிர்களான சிந்து வெளி புதிரும் தமிழ்தொன்மை புதிரும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை மட்டுமல்ல இரண்டும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றும் அவர் கூறுகிறார்.

பொதுவாக இந்தப் புத்தகத்தைப் படித்தவர்கள் கூறும் விமரிசனத்தில், இந்திய வரலாற்றை அதிலும் குறிப்பாக அதன் கலாசார வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புவோர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். அது மட்டுமல்லாமல், தமிழகத்தின் வைகை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கீழடி பகுதியில் நடைபெற்று வரும் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி அறிய ஆர்வம் கொண்டவர்களும் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாம் என்று கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.